Saturday, February 19, 2005

My Opinion..

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நான் படித்த நாகூர் ரூமி நூல்கள்:

நூல் 1: இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்

இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்களை களைய வேண்டி அதற்கு எளிய அறிமுகத்தை கடின முயற்சியுடன் நாகூர் ரூமி அவர்களால் எழுதப்பட்ட நூல் தான் இது.

ஒரு ஹதீஸ் நினைவிற்கு வருகிறது- ஒரு பெரிய யுத்தத்திற்கு பின்னர் பெருமானார் தனது தோழர்களிடத்தில் ‘பெரிய போருக்கு தயாராகுங்கள்’ என்று கூறினார்கள்- தோழர்களுக்கு விளங்க வில்லை. விபரம் கேட்ட போது, பெருமானார், ‘மனதை அடக்கி ஆள்வதே அத்தகைய போர்’ என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.

இந்த ஹதீஸின் ஒளி பல பக்கங்களுக்கு வெளிச்சம் காட்டினாலும் நான் இருந்த பக்கத்தை மட்டும் இங்கே வெளிச்சம் போட்டு காட்ட விரும்புகிறேன்-
அதாகப்பட்டது பெருமானார் பேசியது அவர்களது தோழர்களுக்கு விளங்க வில்லை அதோடு அவர்கள் தாங்களாக ஒரு விளக்கம் கொடுத்துக் கொள்ளாமல் அதற்கு பெருமானாரிடமே விளக்கத்தை கேட்டறிந்தார்கள்.
இது போல் பெருமானார் கூறியது சிலருக்கு புரியாத காரணத்தால் அவர்களாகவே ஏதேதோ விளக்கம் கொடுத்து விட்டு ‘இப்படி தான் இதற்கு விளக்கம்’ என்று கங்கணம் கட்டி நேசத்துடன் கூறி வருகிறார்கள் ஆனால் அது உண்மையில் நேசம் அல்ல வேஷம் என்று சிலருக்கு மட்டுமே தெரிய வாய்ப்புண்டு.

இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. அதாவது பெருமானார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க சொல்லி போதித்தார்கள். அவ்வளவு தான், யாரையும் வற்புறுத்த வில்லை.

அப்படி என்றால் சிலர் வாளெடுத்து தலையை துண்டித்து விட்டு, ‘அல்லாஹ¤ அக்பர்’ என்று கூறுகிறார்களே என்ற கேள்வி எழலாம். அவர்கள் இஸ்லாத்தின் பெயரை தானே முன் வைக்கிறார்கள் என்றும் வாதிடலாம்.

அரபியில் அல்லாஹ் என்ற வார்த்தை இறைவனை குறிக்கும். அதாவது ஒரு அரேபிய கிறிஸ்தவர் இறைவனை குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையை தான் பயன்படுத்துவார். பெருமானாரின் தந்தையின் பெயர் ‘அப்துல்லாஹ்’ என்பதாகும். பெருமானாரின் தந்தையை பெருமானார் அவர்கள் பார்த்தது கூட கிடையாது.
ஒருவன் யாரோ ஒரு அப்பாவியின் தலையை துண்டித்ததற்கு இறைவனுக்கு எப்படி சம்மந்தம் கிடையாதோ அப்படியே இஸ்லாத்திற்கும் அவனுக்கும் சம்மந்தமே கிடையாது. இந்த கருத்தை இந்த புஸ்தகம் தெளிவு படுத்தி விடுகிறது.

இந்த நூலை பற்றியும் தவறான விமர்சனங்கள் புரியாமல் தான் எழுந்துள்ளன. அவர்களுக்கு விளக்கம் பெற வேண்டும் என்ற ஆசையில்லை.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கூறுபவர்களல்ல அவர்கள் தான் பிடித்த முயலையே ஒட்டகம் என்று வாதிட்டு நம்ப வைத்தும் விடுவார்கள். அந்த சாமர்த்தியசாலிகள்(?) அவர்களாக அறிய வேண்டும் என்ற ஆசையுடன் வரும் போது தக்க விளக்கம் இந்த புஸ்தகத்திலேயே இருப்பதை காண்பார்கள்.
யானையை பற்றி குருடர்கள் தடவி பார்த்து வெவ்வேறு விதமாக கூறிய கதை நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் நல்ல வெளிச்சத்தில் உண்மையான ராஜ பார்வையுடன் எல்லா பக்கமும் சென்று அருமையாக இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

வெறுப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு விருப்புடன் படிக்க அனைவரையும் வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்
அ.முஹம்மது இஸ்மாயில்

No comments: